மதுரை மார்ச் 30,
மதுரை அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மது மீட்பு சிகிச்சை
தமிழக அரசின் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ‘கலங்கரை’ ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மைய திறப்பு விழா நடைபெற்றது. இதில் சென்னையிலிருந்து முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மதுரை மையத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குத்துவிளக்கேற்றி அந்த மையத்தை பார்வையிட்டார். விழாவில், மதுரை மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா, மாநகராட்சி மேயர் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், சட்டப் பேரவை உறுப்பினர் கோ. தளபதி (வடக்கு), மு.பூமிநாதன்(தெற்கு), அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் இல. அருள் சுந்தரேஷ் குமார், மதுரை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்