மதுரை, செப். 08 –
மதுரை அவனியாபுரத்தில் அருணகிரி சுவாமிகள் ஆலய மகா கும்பாபிஷேகம் மற்றும் 70-வது ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. மதுரை அவனியாபுரத்தில் உள்ள அருள்மிகு அருணகிரிநாதர் சுவாமிகள் ஆலய எழுபதாவது ஆண்டு குருபூஜை விழா மற்றும் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக அருணகிரிநாதர் கோவில் வளாகத்தில் விக்னேஸ்வர பூஜை புண்ணியாகவாசனம் அணுக்கை பூஜை கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி பூஜையும் மாலையில் கும்ப அலங்காரம் வேதிகார்ச்சனையுடன் முதல் கால யாகசாலை பூர்ணாஹீதியுடன் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து விக்னேஷ்வர் பூஜை கோபூஜை, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், மாஹ பூர்ணா திகுதியுடன் தீபாராதனையும் கடம் புறப்பாடு அருள்மிகு அருணகிரி சுவாமிகள் ஆலய விமான மஹா கும்பாபிஷேகமும் அதனை தொடர்ந்து மூலவருக்கும் மற்றும் பரிகார மூர்த்திகளும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விழாவிற்கு வருகை புரிந்த பக்தர்கள் அனைவருக்கும் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.


