மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அமைந்துள்ள ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் வளாகத்தில் எதிர்வரும் ரம்ஜான் பெருவிழா பண்டிகையை முன்னிட்டு ஊர் நாட்டான்மை பஞ்சாயத்தார்கள் தலைமையில் சமய நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார்,குத்தாலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்,பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் 500க்கும் மேற்பட்ட மாற்று மத சகோதரர்கள் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் இஃப்தார் நோன்பு திறப்புக்கு பின்னர் தொழுகை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஏற்பாடுகளை ஊர் நாட்டாமை பஞ்சாயத்தார்கள் ஜமாத்தார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



