தருமபுரியில் தமிழக அரசின் சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரத்தை தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் துவக்கி வைத்தார். தொடர்ந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோ களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை ஆட்சியர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆட்சியர் முன்னிலையில் வாகனங்களுக்கு பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டது. பஸ்களில் ஆட்சியர் சதீஷ் பயணிகளிடம் சமூக நலத்துறை சார்பில் குழந்தைங்கள் திருமணம் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்பு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இது தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் லட்சுமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெய தேவராஜ், சமூக நலத்துறை அலுவலர் பவித்ரா, நகராட்சி ஆணையாளர் சேகர்,நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தரணீதரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



