மார்ச்:12
உருவபொம்மையை எரித்ததால் பரபரப்பு
திருப்பூர்
தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன் நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர், மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கி பேசினார். வடக்கு மாநகர செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித் தார். தமிழக எம்.பி.க்களை அநாகரிகமான முறையில் பேசிய மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை கண்டித்து ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய மந்திரியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது அவரின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அங்கிருந்த வடக்கு போலீசார் தீயை அணைத்து உருவ பொம்மையை கைப்பற்றினார்கள்.இதில் வடக்கு அவைதலைவர் நடராஜன், திருமுருகன் பூண்டி நகராட்சி தலைவர் குமார், மாநகராட்சி
மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ், பகுதி செயலாளர்கள் ராமதாஸ், நாகராஜ், ஜோதி, வர்த்தக அணி செயலாளர் மணி, கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் அனுசியா தேவி சண்முகசுந்தரம், வடக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்துக்குமார், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், மகளிரணியினர், சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.