நாகர்கோவில் – மார்ச் – 08,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சர்வதேச பெண்கள் என்பது பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட காலத்தில் வர்க்க சுரண்டலுக்கு எதிராக, வேலை நேரம் வேண்டும், வாக்குரிமை வேண்டும், ஆண்களுக்கு இணையான கூலி வேண்டும், அடிப்படை உரிமைகள் வேண்டும் என்ற போராட்டத்தின் விளைவாக உருவான போராட்ட தினம் தான் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் – 08 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதில் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் உழைக்கும் பெண்கள் இயக்கம் சித்ரா தலைமையில் , சிஐடியு மாவட்ட உறுப்பினர்கள், வேலம் , அமுதா , ஜெயராணி , வேலம்மாள் , மேரி, பரமசிவம் , கிருஷ்ணன் , பச்சைமால் , மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு அண்ணா பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்து நின்ற பெண்கள், மற்றும் பள்ளி , கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து பின்வரும் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். கோரிக்கைகள் :-
பெண்களுக்கு கண்ணியமான வேலை வாய்ப்பு உறுதி செய்ய வேண்டும், பெண்களின் அடிப்படை உரிமைகளாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் தனியான கழிவறை, ஓய் வறை, குழந்தைகள் காப்பகம் உள்ளிட்டவைகள் அனைத்து பணியிடங்களிலும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும், அரசு மற்றும் தனியார் துறைகளிலும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு மற்றும் சலுகைகள் அமுலாக்கப்பட வேண்டும், அத்தியாவசிய பொருள்கள் சமையல் எரிவாயு உட்பட விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும் ,மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாட்களாகவும் தினக்கூலி ரூ. 600 ஆகவும் உயர்த்தி நகர் புறங்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் , நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்களிடம் வழங்கினர். இதில் கன்னியாகுமரி மாவட்டம் சிஐடியு, பிஎஸ்என்எல், எல்ஐசி , வங்கி, ஆசிரியர் கூட்டமைப்பு, அரசு ஊழிய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.