சென்னை மே 22
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
ஒரிசாவில் பிரதமர் பேசியதை தமிழர்களுக்கு எதிராக உண்மைக்குப் புறம்பாக திரித்துப் பேசி தவறாக தமிழக மக்களுக்கும் ஒரிசா மக்களுக்கும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தக்கூடிய வகையில் வெளியிட்டிருக்கும் தமிழக முதல்வரின் அறிக்கை அப்பட்டமான பொய் என்று குறிப்பிட்டு மேலும் அவர் பேசுகையில்
அதாவது பிரதமர் பேசியப் பேச்சுக்கும் முதல்வர் அதற்கு கூறும் அர்த்தமும் குற்றச்சாட்டும் தமிழக முதல்வர் மத்திய அரசின் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி மற்றும் தேர்தல் அரசியலுக்காக தமிழர்கள் மீது தேவையில்லாமல் ஒரு அவதூறை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் இருந்தும் ஒரிசாவில் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் ஆன்மிகப் பயணம் மேற்கொள்வதை விரும்பாத பேச்சாக முதல்வரின் அறிக்கை அமைந்திருக்கிறது.
பாரதப் பிரதமர் மோடி தமிழ் கலாச்சாரம் பண்பாடு திருக்குறள் ஆகியவற்றிற்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தையும் செங்கோலுக்கு அளிக்கின்ற உயர் மரியாதையையும் தமிழக மக்கள் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.
குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தில் இருக்கின்ற வேளையில் இந்தியா கூட்டணியின் தோல்வியைத் தெரிந்து கொண்டு அதனை மறைப்பதற்கும் சமாளிப்பதற்கும் பிரதமர் பேசாத வார்த்தைகளை திரித்து அவதூறு கூறும் குற்றச்சாட்டுகளை முதல்வர் தவிர்த்திருக்க வேண்டும்
பிரதமர் பற்றிய தமிழக முதல்வரின் அறிக்கையை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கண்டிக்கிறேன்.
என்று குறிப்பிட்டுள்ளார்.