சமய நல்லிணக்க மீலாது நபி விழா மத்ரஸா ஆண்டு விழா மற்றும் நமிரா ஹிப்ளு மத்ரஸா தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா ஈரோடு முத்தம் பாளையத்தில் நடந்தது. நமிரா மஸ்ஜித் மற்றும் மத்ரஸா தலைமை இமாம் முகமது சயீத் தொடக்க உரை ஆற்றினார். தமிழ்நாடு
அரசு காஜிகள் கூட்டமைப்பு தலைவர் முகமது கிபாயத்துல்லா விழாவுக்கு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறும் போது மதங்களை கடந்து கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் மத நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று பேசினார். நிர்வாக ஆலோசகர் டாக்டர் சபி யுத்தீன் வரவேற்றார். பொருளாளர் சையத் நாசர் துணைத் தலைவர் முகமது சபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை மாநில குழு உறுப்பினர் துரைராஜ் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஈரோடு மாவட்ட செயலாளர் மாரிமுத்து பாதிரியார் ஜான் சாமுவேல் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில உதவி தலைவர் இசாரத் அலி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.முதல்வர் முகமது இஸ்மாயில் விழாவில் நிறைவு பேருரை ஆற்றினார். மார்க்க ஆலோசகர் ஹபீப் முகம்மது நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார் .முடிவில் நமிரா மஸ்ஜித் மற்றும் மத்ரஸா செயலாளர் சாகுல் ஹமீது நன்றி கூறினார்.



