By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்களாட்சியை காக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையாக இருந்தவர் எம்.ஜி.ஆர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > மக்களாட்சியை காக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையாக இருந்தவர் எம்.ஜி.ஆர்
மாவட்டம்வேலூர்

மக்களாட்சியை காக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையாக இருந்தவர் எம்.ஜி.ஆர்

Last updated: March 1, 2025 9:31 am
March 1, 2025 22 Views
Share
SHARE

வேலூர் 28

 

காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி  நடந்தது. நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார்.  துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன் வரவேற்றார்.

துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், விழா நோக்கம் குறித்து  பேசினார். 

எம்.ஜி.ஆர் புகைப்பட கண்காட்சியை முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் திறந்து வைத்து பேசுகையில்,  எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாக உடைந்தது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. கட்சி இரண்டாக உடைந்ததால் அப்போது நடந்த பேரவை தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற முடியவில்லை. பின்னர், ஜெயலலிதா என்னை எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியிடம் சமாதானம் பேச அனுப்பி வைத்தார். அதன்பிறகு மீண்டும் கட்சி இணைந்ததால் அடுத்து நடந்த சட்டமன்ற  தேர்தலில் அ.தி.மு.க கணிசமான வெற்றியை பெற்றது.

தற்போது அதிமுக 3ஆக உடைந்துள்ளதால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. பிரிந்து கிடக்கும் அனைவரும் ஒன்றாக இணைந்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும். எனவே அ.தி.மு.கவினர் சாதி, மத, பேதங்களை மறந்து சகோதரர்களாக இணைய வேண்டும் என்றார்.

விழாவில் வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது; 

தமிழகத்தில் சுயநிதி கல்லூரி என்ற புதிய தத்துவத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.தான். அதன்படி, 1984ல் தொடங்கப்பட்ட 8 சுயநிதி பிரிவு கல்லூரிகளில் வேலூர் பொறியியல் கல்லூரிக்கான அனுமதி எனக்கு தரப்பட்டது. அப்போது, 180 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட வி.ஐ.டி, 2021ல் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது 40 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 4 வி.ஐ.டி  வளாகங்களில் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி சுமார் 70 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு பயில்கின்றனர். இதற்கான அனைத்து புகழும் எம்.ஜி.ஆரை மட்டுமே சேரும்.

தற்போது இருமொழியா, மும்மொழியா என்ற விவாதம் மேலோங்கியுள்ளது. ஆனால், எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கியபோதே ஒரு மொழியின் முன்னேற்றம் மற்ற மொழியின் அழிவில் ஏற்படக்கூடாது.மொழியின் முன்னேற்றம் மக்களின் விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தி உருவாக்க முடியாது என்றார். 

1968ல் நான் எம்.பி.யாக இருந்தபோது மொழிக்கொள்கை தொடர்பான நாடாளுமன்றத்தில், ஹிந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி, ஆங்கிலம், ஹிந்தி படிக்க வேண்டும் என்றும், ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தி, ஆங்கிலம், அத்துடன் தென்னிந்திய மொழிகளில் ஒன்றை படிக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

மொழி பளு அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக இருக்க வேண்டும் என எண்ணி பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் கொண்டு வரப்பட்ட அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இத்தனை ஆண்டுகளாகியும் ஹிந்தி பேசும் எந்த மாநிலங்களிலும் மூன்றாவது மொழியாக தென்னிந்திய மொழி கற்பிக்கப்படுவதில்லை என்பதை நினைவுகூற விரும்புகிறேன். எனவே, மொழிக்கொள்கையை பொருத்தவரை இருமொழி கொள்கைதான் என்பது எம்.ஜி.ஆரின் கருத்து. அதில் வேறுபாடு இல்லை.

எம்.ஜி.ஆர் மக்களாட்சியை காக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் இருந்தார். பொருளாதார கொள்கையை பொருத்தவரை கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த 100 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் என அப்போதே தீர்மானம் போட்டார். அண்ணாவை போன்றே எம்.ஜி.ஆரும் ஜாதியை பார்த்து அல்லாமல் நல்ல கட்சிக்காரர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தார்.

உலகளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5வது இடத்தில் இருந்தாலும், தனிநபர் வருமானத்தில் 141வது இடத்தில் உள்ளது. இதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பலன் ஒரு சிலருக்கு மட்டுமே சென்று சேருகிறது. இதனை சரிசெய்ய மக்களுக்கு  விழிப்புணர்வு தேவை. அத்தகைய விழிப்புணர்வு கல்வி யால் மட்டுமே ஏற்படுத்த முடியும். இந்தியா உயர்கல்வியில் மிகவும் பின்தங்கி உள்ளது. இருந்தாலும் தமிழகம் உயர்கல்வியில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. அத்தகைய மாற்றத்துக்கு எம்.ஜி.ஆர்தான் காரணம்.

கல்வியில் வளர்ந்தால் தான் நாம் பொருளாதாரத்திலும் வளர முடியும். ஆனால், தற்போது எல்லோராலும் உயர்கல்வி பெற முடிவதில்லை. எனவே, அனைவருக்கும் உயர்கல்வியை இலவசமாக அளிக்க வேண்டும். அது முடியாவிட்டால் முதலில் பெண்களுக்காவது உயர்கல்வியை இலவசமாக அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் சிறப்புரை ஆற்றி பேசுகையில்,

உலகத்தினர் மெச்சக்கூடிய அளவிற்கு வி.ஐ.டி.யை உருவாக்கியவர் ஜி.விசுவநாதன். 1957 லவ் இருந்து எம்.ஜி.ஆருடன் பழகியவர் நான். 1967ல் திமுக ஆட்சியை பிடித்தது. அதற்கு காரணம் எம்.ஜி.ஆர். தான் என்றார் அண்ணா. தஞ்சாவூரில் தமிழ் பல்கலைகழகத்தை கொண்டு வந்தார் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்ததை இந்தியாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் எல்லோரும் தமிழ்தான் கையெழுத்து போட வேண்டும் என்று அன்றே உத்தரவிட்டவர் எம்.ஜி.ஆர். தமிழீழ பெண்களின் மானம் காக்க அப்போது பண உதவியும், மருத்துவ உதவியும் செய்தார். மாநிலத்திற்கு பொருளாதார நிதி பகிர்வதை மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சி யுகம் , இப்போது ஆளும் பா.ஜ.கவும்  ஓரவஞ்சனையுடன்  நடந்து கொள்கின்றனர் என்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பாண்டுரங்கன், சு.ரவி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என்.ஜி.பார்த்திபன், தமிழரசன், சூரியகலா, தமிழரசன், லோகநாதன், அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள்  எஸ்.ஆர்.கே.அப்பு, த.வேலழகன், எஸ்.எம்.சுகுமார், ஓ.பி.எஸ் பிரிவு மாவட்ட செயலாளர் டி.ஆர்.முரளி உள்பட திரளான அ.தி.மு.க., அ.ம.மு.க., ஓ. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், பதிவாளர் ஜெயபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தமிழ் நாடு பிரஸ் கிளப் தென்காசி மாவட்டம் உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம்

தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம்

கலைஞர் ஏழாம் ஆண்டு நினைவு நாள்; திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

திண்டுக்கல் ரோட்டரி சங்கம், திண்டுக்கல் இரத்த வங்கி இணைந்து குருதி வள்ளல் 2025 விருது வழங்கும் விழா

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தருமபுரிமாவட்டம்

காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்

February 26, 2025 21 Views
மாநகராட்சி மண்டலம்-15-ல்மாதாந்திர ஆலோசனை கூட்டம்
சிவகங்கையில் கிருஷ்ணசாமி பேட்டி
காவேரி உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும்
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?