நாகர்கோவில் பிப் 22
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில்
அலுவலகத்தில் வைத்து கன்னியாகுமரி மாவட்ட அரசு போக்குவரத்து துணை மேலாளர் வணிகம். ஜெரோலின் லிஸ்பன்சிங் தலைமையில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ஏற்கப்பட்ட உறுதிமொழி:
எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டு வரப்பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம், அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயா் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளா்ப்போம் என்று உலகத் தாய்மொழி நாளில் உளமாற உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.