சாராய வியாபாரிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் குடும்பத்திற்கு தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த முட்டம் கிராமத்தில் கடந்த 14ஆம் தேதி சாராய வியாபாரிகளால் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இரண்டு இளைஞர்கள் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது குடும்பத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் இன்று நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, கருப்பு முருகானந்தம் மூலம் தொலைபேசியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கருப்பு முருகானந்தம், சாராயம் குடித்து செத்தால் 10 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கும் தமிழக அரசு கள்ளச்சாராய விற்பனையை தட்டி கேட்டு உயிரிழந்த இளைஞர்கள் குடும்பத்தினருக்கு நிதி வழங்காதது மிகவும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார் மேலும் மும்மொழி கொள்கை என்பது இந்திய திணிப்பதல்ல எந்த மொழியாவது மூன்றாவதாக படிக்க வேண்டும் என்பதுதான் என்றும் தமிழகத்தில் 55 சதவீதம் பேர் முன்மொழி கல்வி பயில்கின்றனர். தமிழக அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்படுவது ஏழை எளிய மாணவ மாணவிகள் என்றும் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து திமுகவின் கோட்டை என சொல்லப்படும் டெல்டா பகுதியில் மார்ச் மாதத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநாடு நடத்தும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியின் பொழுது பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு, மாவட்ட துணை தலைவர் மோடி கண்ணன், மாவட்ட செயலாளர் எஸ் ஆர் வினோத், மாவட்ட இளைஞரணி தலைவர் பாரதி கண்ணன்,நகர தலைவர் ராஜகோபால், தெற்கு ஒன்றிய தலைவர் ஈழவேந்தன்,உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.



