தக்கலை, பிப்- 8
தக்கலை அருகே மேட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது (37). இவர் தக்கலை நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹமீதா. இந்த தம்பதிக்கு ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார். தற்போது ஹமிதா ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார். சம்பவ தினம் ஹமீதா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். அதன் பின்னர் ஹமிதா வீடு திரும்பவில்லை.
அவரை உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சாகுல் ஹமீது தக்கலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கர்ப்பிணி பெண் ஹமிதாவை தேடி வருகின்றனர்.