இரணியல், ஆக. 11 –
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் குமார் (22) என்பவர் நாகர்கோவில், கோட்டாரில் உள்ள ஒரு அரிசி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் குருந்தன்கோடு அரசு வங்கி முன்பு உள்ள கடையில் அரிசி மூட்டைகளை விநியோகம் செய்ய வண்டியில் இருந்து இறக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த உயர் ரக மோட்டார் சைக்கிள் பிரகாஷ் குமார் மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். பிரகாஷ் குமார் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சையில் தீவிர சிகிட்சையில் உள்ளார். இரணியல் போலீசார் பைக்கை ஓட்டிய ஆலன் (21) என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


