கோவை பிப்:06
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பி.கே.டி பள்ளியில் மாணவர்களுக்கு இடையே 30 நாட்களில் 30 எழுத்துக்கள் என்ற போட்டி டீ.டி.எஸ் பப்ளிகேஷன் ஹோம் என்ற வெளியீட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்றது. இதில் பி.கே.டி பள்ளியை சார்ந்த 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தாங்களே எழுதிய புத்தகத்தை வெளியிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் விக்டோரியா சாந்தி பள்ளியின் நிர்வாக அலுவலர் சுரேஷ் பள்ளியின் முதன்மை கல்வி தலைவர் சௌமியா சந்தோஷ் தொடக்கப்பள்ளி ஆசிரியர் குழு தலைவர் குள்ளமணி ஆகியோர் மாணவர்கள் எழுதிய புத்தகத்தை வெளியிட்டு சிறப்பித்தனர்.
மாணவர்கள் தங்களின் இயல்பான குணங்களையும் பள்ளியிலும், வீட்டிலும் நடக்கும் நிகழ்வுகளை புத்தகமாக எழுதியுள்ளதை பெற்றோர்களும், ஆசிரியர்களும், மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.