சுசீந்திரம், மே 13 –
புத்தளம் அருகே உள்ள கல்லடிவிளை பகுதியை சேர்ந்தவர் காசிராஜன். இவரது மனைவி அபிநய உஷா (38). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஸ்ரீஜித் (17) என்ற மகன் உள்ளார். இவர்களுக்கும் அம்மாண்டிவிளயை சேர்ந்த கிருஷ்ணதங்கம் (45) நிர்மலா (39), கல்லடிவிளையை சேர்ந்த ஆதிலிங்கம் (46), நல்லூரை சேர்ந்த ரோகிணி (43) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இவர்கள் 4 பேரும் அத்துமீறி அபிநய உஷா வீட்டிற்கு சென்று அவரையும் அவரது மகன் ஸ்ரீஜித்தையும் தாக்கியதாக தெரிகிறது. இதில் அபிநய உஷா மற்றும் ஸ்ரீஜித் ஆகியோர் காயமடைந்தனர். இதுகுறித்து அபிநய உஷா சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சுசீந்திரம் போலி சப் இன்ஸ்பெக்டர் தனிஷ் லியோன் கிருஷ்ணதங்கம், ஆதிலிங்கம், ரோகிணி, நிர்மலா ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


