தஞ்சாவூர். பிப்.6.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளானதஞ்சாவூர் அருகே திருக்கானூர் பட்டி ஊராட்சி திருமலை சமுத்திரத்தில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தென்னை நார்கழிவு பஞ்சு தயாரித்தல் அழகு, திருமலை சமுத்திரம் தொகுப்பில் கோழி கொட்டகை ,மசாலாத்தூள் தயாரித்தல் அழகு, மக்காச்சோளம், திணை மதிப்பு கூட்டுதல் அழகு, பைகள் தைக்கும் இடமிடமும், இனத்துக்கான் பட்டி ஊராட்சியில் ஹாலேபிளாக் கற்கள் செய்யும் முறை குறித்து நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்
அதனைத் தொடர்ந்து வல்லம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொற்று நோய் பிரிவு, மருத்துவர் அறை, ஊசி போடும் அறை, மருந்தகம், மகப்பேறு முன் கவனிப்பு அறை, அறுவை சிகிச்சை பிரிவு போன்ற பல்வேறு செயல்பாடுகள் குறித்து சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார்.
புறநோயாளிகளுக்கு வழங்கப் படும் சிகிச்சை முறைகள் பற்றியும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது வட்டாட்சியர் அருள்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.