குளச்சல் ஜன 4
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மண்டைக்காடு அடுத்த காரியா விளையைச் சேர்ந்தவர் அருள்குமார். விவசாயியான இவர் 9 மாதங்களுக்கு முன்பு தனது நிலத்தில் மரவள்ளி கம்புகள் நட்டு மரவள்ளி வளர்த்து வந்தார். இதில் ஒரு மரவள்ளி மூட்டில் 42 கிலோ 100 கிராம் எடை கொண்ட 20 கிழங்குகள் ஒரே செடியில் பிடுங்கும் போது கிடைத்தது. பொதுவாக நான்கு கிழங்குகள் தான் ஒரு செடியில் இருக்கும். ஆனால் 20 கிழங்குகள் இருந்ததால் அந்த விவசாயி அதனைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்.



