நாகர்கோவில் – டிச – 22,
நெல்லை மாவட்டத்தில் நீதி மன்ற வளாகத்தில் நடந்த கொலைக்கும் நீதிமன்றத்திற்கும் சம்மந்தமே இல்லை என கூறிய தமிழக சட்டதுறை அமைச்சர் தமிழகத்தில் இருப்பதற்கு அருகதை அற்றவர் என கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செய்தியார்களிடம் கூறிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், வரும் 30, 31 தேதிகளில் கன்னியாகுமரியில் முதல்வர் கலந்து கொள்ளும் அரசு விழாவிற்கு கூட்டம் சேர்க்க மாவட்ட கல்வி துறை அனைத்து பள்ளிகளுக்கும் . சுற்றரிக்கை மூலம் அனைத்து ஆசியரியர்களும் கலந்து கொள்ள கட்டாய உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்தார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார் .. அப்போது அவர் கேரளாவில் இருந்து மாமிச மற்றும் மருந்து கழிவுகளை கொண்டு வந்து கொட்டும் குப்பை மேடாக கன்னியாகுமரி மாவட்டதை அவர்கள் பயன் படுத்தி வருவதாகவும் இது சோதனை சாவடிகளில் பணிபுரியும் காவல் துறையினரின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும். ஆளும் கட்சி பிரதிநிதிகள் ஏன் ? இதனை கண்டு கொள்ளவில்லை ? அவர்கள் இதற்கும் கையூட்டு பெறுகிறார்களா ? என்ற சந்தேகம் இருப்பதாக கூறிய பொன்னார். வரும் 30, 31 ஆம் தேதிகளில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு நிறைவு விழா அரசு விழாவாக நடைபெற உள்ளது… இதில் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்கிறார் இதில் கூட்டம் வராது என்ற கவலை திமுக விற்கு ஏற்பட்டு விட்டது. எனவே மாவட்ட கல்வி துறை அதிகாரி மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றரிக்கை அனுப்பபட்டு உள்ளது… அதில் அனைத்து ஆட்சியர்களும் இந்த நிகழ்சியில் பங்கேற்க்க வேண்டும் இது கட்டாயம் என கூட்டம் சேர்க்கை நடிவடிக்கை எடுக்கப்படுள்ளதை ஏற்க முடியாது, என்றும் நெல்லை மாவட்டம் நீதி மன்ற வளாகத்தில் நடந்த கொலை சம்பவத்திற்கும் நீதி மன்றத்திற்கும் சம்பந்தமே இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் கூறியிருப்பது, அவரை தமிழகத்தில் இருந்தே வெளியேற்ற வேண்டும், என்றும் நீதி மன்றத்தில் நீதிபதிகள் கூட நாற்காலியில் வந்து உட்கார முடியுமா? என்ற கேள்வியும் எழும்பி விட்டதாக பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.