By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஐந்தாயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > ஐந்தாயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா
திருப்பத்தூர்மாவட்டம்

ஐந்தாயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா

Last updated: November 5, 2024 9:46 am
November 5, 2024
86 Views
Share
SHARE

திருப்பத்தூர்:நவ:05, திருப்பத்தூர் மாவட்டம் சி கே ஆசிரமம் பகுதியில் செயல்பட்டு வரும் ஓசை தொண்டு நிறுவனத்தின் சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகளை நடும் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொண்டு நிறுவனத்தில் நிறுவனர் மற்றும் தலைவர் இயற்கை ஆர்வலர் C. விஜி தலைமையேற்று மரக்கன்றுகளை வழங்கினார். செயலாளர் டாக்டர் அருள் அனைவரையும் வரவேற்று பேசினார். பொருளாளர் கோகுல் வாழ்த்துரை வழங்கினார். 

ஓசை தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பேசுகையில்: இந்த தொண்டு நிறுவனத்தின் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அதிகமான மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். மேலும் நீர்நிலைகளை பாதுகாத்து பசுமையான மாவட்டமாக மாற்ற வேண்டும். நதி நீரை இணைத்தல், திடக்கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதுகாத்து வளமான பூமியாக மாற்றுவதே நோக்கமாக கொண்டுள்ளோம். விவசாயம், கட்டுமான துறை,மக்கள் நலம் கல்வி மேம்பாடு, மருத்துவம், இண்டஸ்ட்ரியல் மூலமாக வளரும் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு முக்கியத்துவம் அளித்தல் போன்ற குறிக்கோள்களை கொண்டுள்ளது. மேலும் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் நோக்கத்தில் இந்த அறக்கட்டளை தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட ஐந்தாயிரம் மரக்கன்றுகள் ஏலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பள்ளிகள், குழந்தை அங்கன்வாடி மையம், பூங்கா, பேருந்து நிறுத்தம் என ஆட்சேபனை இல்லாத பொது இடங்களில் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் (ஓய்வு) சிவானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஓய்வு) ராமமூர்த்தி, மதிமுக ஒன்றிய செயலாளர் விஜயன், காவேரி கூக்குரல் சிவசுந்தர், சி கே ஆசிரம மேனேஜர் ராஜேந்திரன், கணக்காளர் அருண், இன்ஜினியர் சரவணன், தனி உதவியாளர் மூர்த்தி, குழந்தை மேஸ்திரி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். ஏலகிரி மலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அண்ணாமலை, ஆங்கிலோ இந்தியன் ராய், தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் மரக்கன்றுகளை பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் ஓசை தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணியிடம் ஒரு கிலோ 400 கிராம் தங்கம் கொள்ளை: குழித்துறை ரயில்வே போலீசார் தீவிர விசாரணை
பூதப்பாண்டி வனப்பகுதியில் யானைகள் விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்
வயல்வெளியில் கவிழ்ந்தது விபத்து
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் பாரதி விழா
பெண்கள் உதவி கோர 181 என்ற எண்ணில் அழைக்கலாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நித்திரவிளை அருகே அரசு பஸ் சக்கரம் ஏறி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

May 24, 2025
35 Views
ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு
சுகாதாரமற்ற உணவகங்களுக்கு அபதாரம்
சுங்கான் கடையில் தேசிய சாலையில் பஸ் நிறுத்தம்
மலைவாழ் மக்களுக்கு மின்னணு பழங்குடியினர் நல வாரிய அட்டை கலெக்டர் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account