செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 16 அடி உயரம் நீர்பிடிப்பு கொண்ட இந்த ஏரி தற்சமயம் வெளிநாட்டு பறவைகள் மியான்மர் இலங்கை வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த வலசை என்ற பெயர் கொண்ட பறவைகள் வந்ந வண்ணம் உள்ளது இதில் ஏறத்தாழ 2000 -க்கும் மேற்பட்ட சாம்பல் நாரை நீர்க்காகம் புள்ளி மூக்கு வாத்து மூக்கன் கூழைக்கடா குருட்டு வகை போன்ற பறவைகளும் வந்துள்ளன. பறவைகளின் எண்ணிக்கை போக போக நிச்சயம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பறவைக்கான உணவுகள் அருகில் உள்ள நீர் நிலைகளில் கிடைக்கின்றது சரணாலயம் காலை 6 மணி முதல் மாலை 5’30 மணி வரை திறந்திருக்கும் மாலை நேரம் சென்றால் அனைத்து பறவைகளையும் பார்த்து மகிழலாம் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்திற்கும் தடை சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் சரணாலயம் சார்பில் கொடுக்கப்படுகிறது. பறவைகளை அருகில் பார்க்க தொலை நோக்கு வசதிகளும் உள்ளதாக என வனச்சரக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.



