மயிலாடுதுறை, அக். 4 –
மயிலாடுதுறை மாவட்ட நகரத்தின் மையத்தில் கும்பகோணம் சீர்காழி நெடுஞ்சாலையில் ரயில்வே சந்திப்பு இயங்கி வருகிறது. ரயில்வே லயனை கடப்பதற்காக சித்தர்காடு கிராமத்தில் கிராசிங் கேட் இருந்து வந்தது.1975 ம் வருடம் மேற்படி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு இதுநாள் வரை பயன்பாட்டில் இருந்து வருகின்றது. தற்போது மேம்பாலம் பராமரிப்பு வேலை நடைபெறுவதால் 3 மாதங்கள் வரை பொதுமக்களை மாப்படுகை மெயின் ரோடு வழியாக மாற்று பாதையில் ரயில்வே சந்திப்பிற்கும், மயிலாடுதுறை நகரத்திற்கும் செல்ல வேண்டி இருக்கிறது.
இதனால் பேருந்துகள், லாரிகள், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் அனைத்தும் மாப்படுகை வழியாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுதால் நோயாளிகளும், ஆம்புலன்ஸ்களும், பொது போக்குவரத்தும், பள்ளி, கல்லூரி வாகனங்களும், பணிக்கு செல்வோரும், இரு சக்கர வாகனங்களும் 3 கி.மீ தூரத்தை கடப்பதற்கு 1 மணி நேரம் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளும், பள்ளி கல்லூரி மாணக்களும், வேலைக்கு செல்வோர்களும், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
எனவே மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அவர்கள் மூடப்பட்ட பழைய சித்தர்காடு ரயில்வே கிராசிங் லயனை மீண்டும் புதுப்பித்து பாதுகாப்பான முறையில் கேட் தீப்பரை நியமித்து பொது போக்குவரத்திற்கு பயன்படும் வகையில் திறக்க வேண்டியும் மாற்று பாதையாக மயிலாடுதுறை திருவாரூர் ரயில்வே பாதையில் மயிலாடுதுறை நகரத்தை ஒட்டி புது ரயில்வே கிராசிங்கை ஏற்படுத்தி ஒரு கேட் கீப்பரை நியமித்து பொது போக்குவரத்திற்கு பயன்படும் வகையில் திறக்க வேண்டியும் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் சார்பாக கடிதம் எழுதியுள்ளார்.



