தேனி, ஜூன் 24 –
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் செயல்பட்டு வரும் அண்ணா கூட்டுறவு நூற்பாலையின் செயல்பாடுகள், உற்பத்தித் திறன், தொழிலாளர் நலத்திட்டங்கள் மற்றும் எதிர்கால மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை தந்த தமிழ்நாடு அரசின் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி அவர்களை, இன்று (24.06.2026) வைகை அணை ஆய்வு மாளிகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. வைத்திநாதன் பூங்கொத்து வழங்கி மரியாதையுடன் வரவேற்றார்.
தொடர்ந்து, அண்ணா கூட்டுறவு நூற்பாலையின் தற்போதைய செயல்பாடுகள், உற்பத்தி வளர்ச்சி, இயந்திரங்கள் நவீனமயமாக்கல், தொழிலாளர்களின் பணிச்சூழல் மற்றும் நலன்கள் தொடர்பாக அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மேலும், கூட்டுறவு நூற்பாலையின் வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாக அலுவலர்கள், கூட்டுறவுத் துறை மற்றும் நூற்பாலை நிர்வாக அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த ஆய்வு மூலம் நூற்பாலையின் செயல்திறன் மேம்பட்டு, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்வதுடன், மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது



