திருக்கடையூர், ஆகஸ்ட் 26 –
தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமை ஆதினத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் கண்காணிப்பாளராக மணி என்பவர் இருந்து வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் பொய்யான இனைய தளத்தை உருவாக்கி ஆலய அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள், வெளிநபர்கள் நன்கொடை பெற்று வருவதாக கூறி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சைபர் க்ரைம் காவல் துறையில் புகார் கொடுத்து உள்ளார். இந்த வழக்கு இதுவரை நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் வழக்கில் இருந்து விடுபடவும், கோயில் நிர்வாகம் உங்களை ஆலயத்தை விட்டு நீக்காமல் இருக்கவும், ஆலய அர்ச்சகர்களை மிரட்டி ஒரு பெரும் தொகையை கோயில் கண்காணிப்பாளர் மணி பெற்று உள்ளார். மேலும் கோயிலில் நடைபெறும் அத்துமீறல்களை தட்டி கேட்கும் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் மீதும் இந்த வழக்கில் சேர்த்து விடுவதாகவும், மிரட்டி பலரை அந்த வழக்கில் சேர்த்தும் புகார்களை கொடுத்து வருகிறார்.
ஆலயத்தில் உள்ள நிர்வாக சீர்கேடுகளை தட்டி கேட்கும் பக்தர்கள், ஊர் பொதுமக்கள் மீதும் பொய்யாக வழக்கு தொடுக்கும் ஆலய கண்காணிப்பாளரால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருவதாகவும் தருமை ஆதின ஆதினகர்த்தர் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.



