தேர்தல் பொறுப்பாளர் கோவிசேதுராமன் தலைமை வகித்தார். தேர்தல் பார்வையாளர் பேட்டைசிவா, மாவட்ட பொறுப்பாளர் அண்ணாமலை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு புதிய பொறுப்பாளர்களை அறிவித்தனர். இதில் மயிலாடுதுறை நகரத்தலைவராக ராஜகோபால், தெற்கு ஒன்றிய தலைவராக ஈழவேந்தன், மணல்மேடு வடக்கு ஒன்றிய தலைவராக நடராஜ், குத்தாலம் கிழக்கு ஒன்றிய தலைவராக சிவா, மேற்கு ஒன்றிய தலைவராக சுரேஷ்குமார், செம்பனார்கோவில் மத்திய மண்டல் தலைவராக அஜித்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய பொறுப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில் பாஜ பொறுப்பாளர்கள் வெ ங்கடேசன், மோடிகண்ணன், நாஞ்சில்பாலு, ஸ்ரீதர்,சந்தோஷ், கோமல் வினோத், ராஜ்மோகன் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.



