By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி கடல் நடுவே திருவள்ளுவர் சிலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி கடல் நடுவே திருவள்ளுவர் சிலை
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி கடல் நடுவே திருவள்ளுவர் சிலை

Last updated: October 27, 2024 5:54 pm
October 27, 2024 38 Views
Share
SHARE

நாகர்கோவில் அக் 27 

 

கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் குறித்து துறை அலுவலர்களுடன் நேற்று கலந்தாலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில், கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம் ஆகிய மண்டபங்களை சீர்படுத்திட பொதுப்பணித்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்களுக்கு ஆட்சியரால் அறிவுறுத்தபட்டது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சூரிய உதயம், சூரியன் மறைவு ஆகியவற்றை கண்டு களிப்பதற்கு அப்பகுதிகளில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவும், பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளை ஏற்படுத்திடவும், கழிப்பறைகளை சுகாதாரமாக பேணிடவும் அறிவுறுத்தப்பட்டது.

 

கடற்கரை திரிவேணி சங்கமம் பகுதிகள், நீச்சல் குளம் அமைந்துள்ள பகுதிகளில் நிழற்குடைகள் அமைத்தும், குறிப்பாக, சுற்றுலா வரும் குழந்தைகளுக்கு விளையாட்டு பூங்கா, சிறுவர் பூங்கா, சுனாமி பூங்கா ஆகியவற்றினை சீரமைத்து, பொழுதுபோக்கு விளையாட்டு பொருட்கள் அமைத்து பராமரித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பூங்கா பகுதிகளை வண்ணச் செடி கொடிகளால் அழகுப்படுத்திடவும், மலர்கண்காட்சிகள் நடத்திடவும் தோட்டகலைத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

மேலும், கன்னியாகுமரி ரவுண்டானா முதல் காந்தி மண்டபம் வரையும், ரவுண்டானா முதல் சன்செட் பாயின்ட் வரையும், ரவுண்டான முதல் சீரோ பாயின்ட் வரையும், காந்தி மண்டபம் முதல் சன்செட் பாயின்ட வரையும், ரவுண்டானா முதல் பகவதியம்மன் கோயில் வரையும், ரவுண்டானா முதல் விவேகானந்தபுரம் வரையும், விவேகானந்தபுரம் முதல் பழத்தோட்டம் வரைக்கும் எல்.இ.டி தெருவிளக்கு அமைத்தும், உயர்கோபுர விளக்குகள் அமைத்தும் சுற்றுலா தளத்தினை மெருகூட்டிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை சாரந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவசரகால உதவிகள் குறித்த விவரங்களையும், வழிகாட்டி பதாகைகள் அமைத்திட வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சுற்றுலா தளங்கள் குறித்த விவரங்களையும் கன்னியாகுமரியிலிருந்து அந்தந்த சுற்றுலா தளங்களுக்கு செல்லுவதற்கான வழித்தடம் மற்றும் பயண நேரம் குறித்தும் அறிவிப்பு பலகைகள் சுற்றுலா அலுவலகம் மற்றும் முக்கியமான இடங்களில் அமைத்திட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.

 

மேலும், கன்னியாகுமரிக்குட்பட்ட அனைத்து சுற்றுலாப் பகுதிகளிலும், குப்பைகள் தேங்காத வண்ணம் அவ்வப்போது தூய்மை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்திடவும், தெருநாய்களை கட்டுப்படுத்திட பேரூராட்சி செயல் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்ட சமையலறைகள், பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்கள் பழுதுகள் நீக்கி சீரமைத்திடவும், சாலைகள் மற்றும் கட்டுமான பணிகளை போர்கால அடிப்படையில் தரமானதாகவும், உறுதித்தன்மையுடனும் அமைத்திடவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

சுற்றுலா தளத்தில் உள்ள அனைத்து உணவகங்கள், சிற்றுண்டி கடைகள், தங்கும் விடுதிகள் மற்றும் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் காலாவதி தேதி, தரம், அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் விவரங்களையும், தயாரிக்கப்படும் உணவுகளின் தரத்தினையும் சுகாதாரத்தினையும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து, உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

 

கப்பல் போக்குவரத்துக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள லேசர் ஒளி விளக்கு, கேலரி பணிகளை விரைந்து முடித்து சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து அய்யன் திருவள்ளுவர் சிலையினை கண்டு களிக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள சுற்றுலா அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்தினை சீரமைத்தும், துறைமுக வளாகத்தில் சுகாதாரமாக வைத்திடவும் துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள படகு அணையும் தளத்தினை ஆய்வு மேற்கொண்டதுடன், அவற்றில் சில சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, திருவள்ளுவர் சிலை-விவேகனாந்தர் பாறையை இணைக்கும் கடல்சார் கண்ணாடி கூண்டுபாலம் அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

அப்போது பணிகளை விரைந்து முடித்து சுற்றுலாப் பயணிகள் பார்வையிட நடவடிக்கை மேற்கோள்ள துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சத்தியமூர்த்தி, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜான் ஜெகத் பிரைட், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

You Might Also Like

திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா மற்றும் பணியேற்பு விழா

ஜி.டி.என். இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மருத்துவக்கல்வி ஒருநாள் இலவச நீரிழிவு மருத்துவ விழிப்புணர்வு முகாம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி MP பிறந்தநாள் விழா

தருமபுரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரிமாவட்ட இந்தியகம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அரசு நகல் எரிக்க முயற்சி

February 9, 2025 31 Views
5வது திருமணம் செய்ய போன மனைவி
2024 -ம் ஆண்டிற்கான கல்வி சார் சிறப்பு விருது
கல்வி -செல்வம் -வீரம் என்ற பன்னாட்டு கருத்தரங்கு
தமிழக விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?