சென்னை – அக்டோபர் – 06 ,
ஆரெம்கேவி சென்னையில் தி.நகர் பனகல் பூங்கா, வடபழனி விஜயா மால், பீனிக்ஸ் வேளச்சேரி 3 கிளைகள் மற்றும் திருநெல்வேலி கோயம்புத்தூர் , பெங்களூரு ஆகிய கிளைகள் இயங்கி வருகிறது.
ஆரெம்கேவி கல்யாண பட்டு தொடங்கி 100 வது ஆண்டை கொண்டாடும் வகையில் புதிய 4000 வண்னங்களில் பட்டுப் புடவைகளை கண்காட்சியில் அறிமுகப்படுத்தவுள்ளது .
ஆரெம்கேவி கல்யாணபட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குமாரசாமி சிவகுமார் இந்நிகழ்ச்சிப்பற்றி தெரிவித்தாவது:-
1924 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘ஆரம்கேவி கல்யாணபட்டு” 2024 -ல் தனது 100 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற இந்த தருணத்தில் இதுவரையில் 100 டிசைன்களை அறிமுக படுத்தியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் 11 டிசைன்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
கடுக்காய், நெல்லிக்காய், மாதுளை, மல்பரி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட தாவரங்கள், தாதுக்களை பயன்படுத்தி இந்த வண்ணங்களை உருவாக்கி
சங்க இலக்கியத்தில், குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் தமிழ் நிலத்தின் 99 பூக்களை பட்டு புடவையில் ஜரிகையால் நெய்து புடவைகளாக உருவாக்கி புதிய சாதனை படைத்துள்ளது.
கற்பக விருட்சம் பட்டுபுடவை
கற்பகவிருட்சம் பட்டுபுடவை, கடுக்காய், மல்பரி, மரப்பிசின் போன்ற பொருள்களின் இயற்கை வண்ணத்தில் பாரம்பரிய வண்ணமேற்றும் முறையில் வண்ணம் ஏற்றப்பட்டு முந்தானையில் ஜரிகையால் கற்பகவிருட்சம் நெய்யபட்ட அழகிய பட்டு புடவையை அறிமுகப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்தார்.