தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய மரியா ஷில்பாவை இடமாற்றம் செய்த ஆணையை ரத்து செய்து அவரை மீண்டும் அந்தப் பள்ளியில் பணியாற்ற வேண்டும் .என்று மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் புகார் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவில் எங்கள் குழந்தைகள் இலக்கம்பட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். எங்களது குழந்தைகளுக்கு வகுப்பு ஆசிரியராகவும், சமூக அறிவியல் ஆசிரியராகவும் மரியா ஷில்பா என்கிற ஆசிரியைஇருந்து வந்தார். எங்கள் குழந்தைகளுக்கு ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், சிறப்பாக வகுப்புகள் எடுத்தார். மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைத்தார். எங்கள் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை அவ்வப்பொழுது செய்வார். எங்கள் குழந்தைகளை ஸ்கவுட், என் என் எஸ் தேர்வு, கலைத் திருவிழா ஆகியவற்றில் கலந்து கொள்ள செய்து, மாநில அளவில் ஜெயிக்க வைத்தார். மாணவர்களுக்கு முன்னுதாரணமாக ஆசிரியராக பணியாற்றி வந்தார். எங்கள் குழந்தைகளுக்கு இந்த ஆசிரியர் மிகவும் பிடிக்கும். சராசரி மாணவர்களாக இருந்த எங்கள் குழந்தைகளுக்கு தற்போது நன்றாக படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் ஒரு சில ஆசிரியர்களின் கால் புணர்ச்சி காரணமாக மரியா ஷில்பா ஆசிரியை மீது பொய்யான புகார் அடிப்படையில் கல்வித்துறை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து ஆணையிட்டுள்ளதாக கேள்விப்பட்டோம். இப்பள்ளியில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைகளில் பல்வேறு முறை கேடுகள் நடப்பதாகவும் கேள்விப்பட்டோம்,
அதற்கு ஒரு சில ஆசிரியர்களும் துணை போவதாகவும் அறிந்தோம் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு ஆசிரியர் மரியா ஷில்பா மீது கொடுக்கப்பட்ட பொய் புகாரின் மீது மட்டும் எந்த ஒரு விசாரணையும் இன்றி அவசரகதியில் நடவடிக்கை எடுத்து அவரை இடமாற்றம் செய்ய ஆணை பிறப்பித்தது ஏற்புடையது அல்ல,
இவ்வாறு செய்வதால் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவது என்பது முன்னுதாரணம் ஆகிவிடும். இந்த ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் எங்கள் குழந்தைகள் மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ளனர். எங்கள் குழந்தைகளின் படிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. படிக்க ஆர்வமும் இல்லாமல் உள்ளனர் எனவே மரியா ஷில்பா ஆசிரியருக்கு வழங்கப்பட்ட இடமாறுதல் ஆணையை ரத்து செய்து தொடர்ந்து இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்ற ஆவண செய்யுமாறு தங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். என மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.



