கிருஷ்ணகிரி, செப்.28:
கிருஷ்ணகிரி லண்டன் பேட்டையில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம், புடவை மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தொடர்ந்து 4ம் ஆண்டாக நடைபெற்று வரும் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா, முன்னாள் மஸ்ஜிதே அக்ஸா துணைத்தலைவர் ஜனாப் V. ரியாஸ் தலைமையில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான மதியழகன் எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் முன்னாள் கவுன்சிலரும் திமுக பொதுக்குழு உறுப்பினருமான அஸ்லம் ரகுமான் ஷெரிப் வரவேற்புரையாற்றினார். பின்னர் ஐந்து பெண்களுக்கு இலவச தையல் இயந்திரமும், 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச புடவை, 50 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் பிரியாணி விருந்தை துவக்கி வைத்தார். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சியில் திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அவை தலைவர் தட்ரஹள்ளிநாகராஜ், ஆர்.நவீத், தொழிலதிபர் கே.வி.எஸ் சீனிவாசன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல் பாலாஜி, ரஜினி செல்வம், வி.காதர், தமுமுக மாவட்ட தலைவர் ஜி.நூர்முகமத், திமுக மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர்.சுரேஷ்குமார், காவேரிப்பட்டினம் மாதையன், முகமது ஜான், முபாரக், கலீல், உருது பயான் ஹஸ்ரத் காஜா அமீனுல்லா ஷா, மற்றும் லண்டன் பேட்டை மொஹல்லாவாசிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் தளபதி ரஹமத்துல்லா நன்றி உரையாற்றினார்.
நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Leave a comment