கரூர் ,செப்.27-
கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய வெள்ளியனை ஊராட்சி வழியாம்புதூரில் தமிழக அரசின் சாதனைகள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்வையிட்டனர். அப்போது தமிழக அரசின் சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.



