By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி அருகே கிராமத்திற்கு செல்லும் பொதுப்பாதையை அடைத்த நபர்கள்! காவல் துறையினர் நடவடிக்கை!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி அருகே கிராமத்திற்கு செல்லும் பொதுப்பாதையை அடைத்த நபர்கள்! காவல் துறையினர் நடவடிக்கை!
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி அருகே கிராமத்திற்கு செல்லும் பொதுப்பாதையை அடைத்த நபர்கள்! காவல் துறையினர் நடவடிக்கை!

Last updated: July 3, 2026 5:58 pm
July 3, 2026
30 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 3 –

கிருஷ்ணகிரி அருகே உள்ள கும்மனூர் கிராமம் அருகே உள்ளது சின்னராகிமானப்பள்ளி. இங்கு 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக பொது வழி பிரச்சனை இருந்து வருவதையொட்டி அதே கிராமத்தை சேர்ந்த ராஜாமணி தரப்பினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வழக்கு தீர்ப்பின்படி, வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஆக்கிரமிப்புகளை அளந்து எல்லை நிர்ணயம் செய்தனர். ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

இந்த நிலையில் எதிர் தரப்பினர் நேற்று மாலை கிராமத்திற்கு செல்லும் பொதுவழியை ஏர் உழுது, கற்கள் குவித்து கிராம மக்கள், கிராமத்திற்கு செல்ல முடியாதவாறு தடுத்தனர். இது குறித்து காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் பொது வழி பாதையை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து சாலையில் ஏற்படுத்திய தடுப்பு கற்களை அகற்றினர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்தரப்பினரை எச்சரித்தனர்.

இந்நிலையில் இன்று கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரின் சமாதான செய்து, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பொதுவழி அமைத்து தருவதாக உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அதே கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கூறுகையில்: எதிர்த்தரப்பினர் வேண்டுமென்றே பிரச்சனை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் பொது வழி பாதையில் கற்களை கொட்டி தடங்கலை ஏற்படுத்தினர். இதனால் இன்றைக்கு எங்கள் கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் யாரும் பள்ளி கல்லூரிக்கு செல்லவில்லை. தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராமத்திற்கு பொது வழி பாதையை ஏற்படுத்தி தர வேண்டும் என வேதனைடன் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

ரூ.3 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 2 இலட்சம் நாட்டின மீன்குஞ்சுகள்
கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு ரயில்வே கோட்டம்: மத்திய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி மனு
பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் செய்திமக்கள் தொடர்பு அலுவலரிடம் பத்திரிகையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு
ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 449 பள்ளிகளில் விழிப்புணர்வு மன்றங்கள் மூலமாக போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் ரேவதி தகவல்

July 31, 2026
18 Views
மனித நேய வார நிறைவு விழா
ராமேஸ்வரத்தில் 29 பேஜ் முன்னாள் மாணவிகள்
தளவாய்சுந்தரம் சொந்த நிதியில் தெற்கு குண்டல் மக்களுக்கு குடிநீர்
பரமக்குடியில் ரூ.3 போடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account