நீலகிரி. ஏப்ரல். 01.
நீலகிரி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்து கோத்தகிரி பகுதியில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோத்தகிரி ஒன்றிய திமுக சார்பில் கோத்தகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டபெட்டு மற்றும் அரவேணு பகுதிகளில் கோத்தகிரி ஒன்றிய கழகச் செயலாளர் நெல்லை கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன், ஒன்றிய அவை தலைவர் கில்பர்ட், குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, கோத்தகிரி பேரூர் கழக செயலாளர் காளிதாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதிகள் சண்முகராஜ், முகமது ஜாபர், சுசில், சிவானந்தம், தொமுச மாவட்ட செயலாளர் கல்லட்டி தினேஷ், ஒன்றிய துணை செயலாளர் மு. க. கணபதி, ஒன்றிய பொருளாளர் நடேசன், பேரூர் கழகப் பொருளாளர் சிங்காரம், கோத்தகிரி பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமாரி, தலைவர் உமாநாத் மாவட்ட வர்த்தக அணி தலைவர் யோகேஸ்வரன், துணை அமைப்பாளர்கள் அசார் கான், பத்மநாபன் , தங்கேஸ், எம். சுரேஷ் குமார், ஆர். சுரேஷ்குமார், மணிக்குமார், அகல்யா, யாஸ்மின், மாவட்ட கழக பேச்சாளர் இளந்தென்றல் பாபு, கண்ணம்மாள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கட்டபெட்டு பகுதியை சேர்ந்த ப. யோகேஸ்வரன், ஆசைதம்பி, மற்றும் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்



