சங்கரன்கோவில். செப்.25.
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில்,
திமுக தலைவர் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை வியாழக்கிழமை செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள வைஷ்ணவி மகாலில் வைத்து மாவட்ட அவைத்தலைவர் பத்மநாதன் தலைமையில் நடைபெறுகிறது எனவும் , இந்த கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார் எனவும், எனவே இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள்,மாநில, மாவட்ட, ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், முத்த உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பாக முகவர்கள், கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் எம்எல்ஏ ராஜா குறிப்பிட்டுள்ளார்.



