தருமபுரி அதியமான் கோட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் புள்ளியல் துறை அலுவலகம் சார்பில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முதன்மை புள்ளியில் துறை அதிகாரி மதிவாணன் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு பள்ளி வளாகம் மைதானம் முழுவதும் சுத்தம் செய்து தூய்மைப்படுத்தினர். இதைத்தொடர்ந்து சுத்தம் செய்வதற்கான உபகரணங்களை அலுவலக கண்காணிப்பாளர் பள்ளிக்கு வழங்கினார்.



