கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசினர் பொறியியல் கல்லூரியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக, தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், 54 கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் 6,270 மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 -க்கான பற்று அட்டைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் .தே.மதியழகன் (பர்கூர்), .ஒய்.பிரகாஷ் (ஓசூர்), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் .மணிமேகலை நாகராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) .ஜெயந்தி, இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் .சரவணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



