கோவை, ஜூன் 03 –
கோவை இடையர்பாளையம் திமுக பகுதி கழகம் சார்பாக முத்தமிழர் கலைஞரின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டமுத்தூர் ரவி தலைமையிலும், இடையர்பாளையம் பகுதி செயலாளர் மதியழகன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்கள்.
இதில் மாமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், வட்ட செயலாளர்கள் கிருஷ்ணராஜ், குமரேசன், ஆறுமுகம், மைக்கேல், ரஞ்சித்கமல், காளிதாஸ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆர் சி தியாகராஜ், நாகராஜ், பகுதி நிர்வாகிகள் கண்ணகி, ஈஸ்வரன், சோனைசாமி, ராதா, குணசேகரன், ராசா, பாலசுப்ரமணியம் வைஷ்ணவி, மகளிர் தொண்டர் அணி சுமதி மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



