ராமநாதபுரத்தில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான விற்பனையில் நடைபெற்ற ஊழலை கண்டித்தும் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வலியுறுத்தி பாஜகவினர் தடையை மீறி அரண்மனையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளி முன்னாள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் மாநில பொதுச் செயலாளர் பொன். பாலகணபதி உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து இரவு விடுவித்தனர்.



