ராமநாதபுரம், மே 11-
ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் பூத் கிளை கழகம் அமைக்கும் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதிமுக பொதுச்செயலாளர்,சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க
இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி தலைமையில் மண்டபம் மேற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியன் ஏற்பாட்டில் பல்வேறு இடங்களில் பூத் கிளை கழகம் அமைக்கும் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள்
கழக அமைப்பு செயலாளர் சுதா.K.பரமசிவன், கழக அம்மா பேரவை இணைச்செயலாளர் ராஜாவர்மன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சிப் பணி ஆற்று குறித்து உரிய ஆலோசனைகள் வழங்கினர்.
கூட்டத்தில் மகளிர் அணி மாநில நிர்வாகி கீர்த்திகா முனியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சிப் பணி குறித்து ஆலோசனை வழங்கினார்.
மண்டபம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்
மாவட்ட சிறுபான்மைபிரிவு செயலாளர் தர்வேஸ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெய்லானி சீனிகட்டி, மாவட்ட வழக்கறிவு பிரிவு தலைவர் கருணாகரன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டுக்கோட்டை ஜெய கார்த்திகேயன் உட்பட ஒன்றிய நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
காலையில்
பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சியில் ஆலோசனை கூட்டம் பாரதி நகர் தனியார் மகாலில் நடைபெற்றது. தொடர்ந்து பனைகுளம்,அழகன்குளம் ஊராட்சிகளில் அழகன்குளம் ஆனந்தபுரம் சமுதாயக் கூடத்திலும்
மானங்குடி, வெள்ளரிஓடை மற்றும் விடுபட்ட ஊராட்சிகள் (புதுமடம்,தாமரைக்குளம், இரட்டையூரணி) புதுமடம்,மானங்குடி மெயின் சாலை நாகநாதர் கோவில் அருகிலும் நடைபெற்றது.
மண்டபம் மேற்கு ஒன்றியத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்ட ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருது பாண்டியன் தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.



