நாகர்கோவில் ஆக 10
கன்னியாகுமரி மாவட்டம் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், சுற்றுலாத்துறை. கலை மற்றும் பண்பாட்டு துறை இந்துசமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை. வருவாய் துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த அயலக தமிழர்வாழ் மாணவ மாணவியர்களை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் வரவேற்று தெரிவிக்கையில்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அயலகத் தமிழர்களின் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு நகர்வாக பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயர்ந்து அங்கு வாழும் அபலகத்தமிழர்களின் குழந்தைகளுக்காக வேர்களைத்தேடி’ என்றொரு பண்பாட்டுப்பயணத் திட்டத்தினை அறிவித்து. 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களை தமிழ்நாடு அரசு செலவில் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து அவர்கள் தமிழ் மற்றும் தமிழர்தம் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு பண்பாட்டு பயணம் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருந்தார்கள்.
அதனடிப்படையில் முதற்கட்டமாக கடந்த 03.01.2024 அன்று இப்பண்பாட்டு பயணத்திற்காக ஆஸ்திரேலியா, கனடா, பிஜி. இலங்கை ஆகிய 4 நாடுகளை சேர்ந்த 57 இளைஞர்கள் தேர்வாகி சென்னை, தஞ்சாவூர். சிவகங்கை. தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, செஞ்சிகோட்டை காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு பயணித்து தமிழர்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலை, இயல், இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம். சுதந்திரபோராட்ட வரலாறு, பல்வேறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்வார்கள். இத்துடன் தமிழ் அறிஞர்கள் மற்றும்
ஆய்வாளர்களுடன் கலந்துரையாடல்களும் பயிற்சி வகுப்புகளும் வழக்கப்பட்டது.
இரண்டாம் கட்டபயணமாக, தென்ஆப்ரிக்காவில் இருந்து 14 இளைஞர்கள், உகாண்டாவில் இருந்து 3 இளைஞர்கள், குவாடலூப்வில் இருந்து 2 இளைஞர்கள், மார்டினிக்வில் இருந்து 3 இளைஞர்கள், பிஜீவில் இருந்து 12 இளைஞர்கள். இந்தோனேஷியாவில் இருந்து 9 இளைஞர்கள், மொரிஷியஸில் இருந்து 13 இளைஞர்கள், ஆஸ்திரேலியாவில் இருந்து 3 இளைஞர்கள், மாலத்தீவில் இருந்து 1 இளைஞர், கனடாவில் இருந்து 9 இளைஞர்கள், மியான்மரில் இருந்து 14 இளைஞர்கள், மலேசியாவில் இருந்து 4 இளைஞர்கள், இலங்கையில் இருந்து இளைஞர்கள், பிரான்ஸில் இருந்து 3 இளைஞர்கள். மற்றும் ஜெர்மனியில் இருந்து 1 இளைஞர் என 15 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத்தமிழ் இளைஞர்கள் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு வேர்களைத்தேடி திட்டத்தின் இரண்டாம் கட்ட பயணம் கடந்த 01.08.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இருந்து துவக்கி வைத்தார்.
மேலும் இப்பயணமானது 01.08.2024 அன்று சென்னையில் துவக்கி செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை சிவகங்கை, தூத்துக்குடி. திருநெல்வேலி தென்காசி, மதுரை, சிவகங்கை, விழுப்புரம் ஆகிய இடங்களுக்கு பயணித்து சென்னைக்கு வரும் 14.08.2024 அன்று சென்றடைவார்கள். தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் அதன் ஒருபகுதியாக
வேர்களைத்தேடி திட்டத்தில் பங்கேற்றுள்ள இளைஞர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்து, கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு அழைத்து செல்லப்பட்டதோடு, அய்யன் திருவள்ளுவர் அவர்கள் இயற்றிய உலகப்பொதுமறையாம் திருக்குறளின் சிறப்பு அம்சங்கள் குறித்து, அயலகத்தமிழர்வாழ் இளைஞர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் அங்கு எழுதப்பட்டுள்ள திருக்குறளினை வாசித்து அவற்றின் பொருளை கேட்டறிந்தார்கள்.
இந்த இருவார பயணத்தின் மூலம் தமிழர்களின் கலாச்சாரம், வரலாறு, மொழியியல் உட்பட பல்வேறு திறன்களை கற்றுணர்வார்கள். இப்பயணத்தின் கடைசி நாளான 15.08.2024 அன்று சென்னையில் உள்ள பெரியார் திடலில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் இந்த இளைஞர்கள் பங்கேற்று தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



