மதுரை ஜூலை 21,
மதுரையில் ஆகாய நடை மேம்பாலம்
மதுரை ரயில் நிலையம் ரூ 347.47 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு பயணிகள் வசதிக்காக ரயில் நிலையத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வகையில் சுரங்கப்பாதை, ஸ்கைவாக் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் மதுரை ரயில் நிலையத்தில் விரிவாக்கத்திற்கான பல்வேறு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.