திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.
திருப்பூர், ஜூலை.9- திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. – இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.
ஈக்களுடன் வந்து மனு தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 2 டப்பாக்களில் புதிய வகை ஈக்களை பிடித்துக்கொண்டு மனு கொடுக்க வந்தனர்.
இதனால் கலெக்டர் அலு வலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தனர். அந்த மனு வில் கூறியிருப்பதாவதுதாராபுரம் சின்னக்காம் பாளையம் பகுதியில் கோழிப்பண்ணை உள்ளது. இந்த கோழிப்பண்ணையை அகற்றும் படி கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறோம். தற்போது கோழிப்பண் ணையில் இருந்து புதிய வகை ஈக்கள்
டப்பாக்களில் பிடித்து கொண்டு வரப்பட்ட புதிய வகை ஈக்கள்.
உற்பத்தியாகி காற்றின் மூலம் பரவி வருகிறது.
கோழிப்பண்ணையை முட கோரிக்கை மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து உணவுகளில் விழுவதால் உணவை உண்ண முடி யாத நிலை உள்ளது. இரவு நேரங்களில் தூங்கும்போது காதில் ஈக்கள் புகுந்து விடுகிறது. கடிப்பதால் அரிப்பு ஏற்படுகிறது. காய்கள் மற்றும் கீரைகளை சேதம் செய்கிறது.
கால்நடைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது
குழந்தைகளை வளர்க்க முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. இந்த கோழிப் பண்ணையால் துர்நாற்றம் ஏற்படுகிறது. கோழி இறகுகள் காற்றில் அதிகமாக வருகிறது. சின்னக்காம்பா ளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளிடம் அளிக்கப்படும் மனுக்களை கண்டு கொள்வதில்லை. எனவே இந்த கோழிப் பண்ணையை நிரந்தரமாக மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஈக்களை பரவலை கட்டுப்படுத்த
வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.