அரியலூர்,ஜூலை:04
அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் செந்துறை வட்டாரத்தின் சார்பில் மாவட்ட இணை செயலாளர் தலைமையில் நேற்று மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள்
1) புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திடுக!
2) 21 மாத கால ஊதிய மாற்ற நிலுவைத் தொகை முடக்கப்பட்ட அகவிலைப்படி பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிடுக!
3) சத்துணவு மற்றும் அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர் ஊர்ப்புற நூலகர் ,எம்.ஆர்.பி செவிலியர்,உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிடுக!
4) சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்திடுக!
5) அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணிடங்களில் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிடுக!
6) கருணை அடிப்படையில் பணி நியமனம் 25 சதம் வழங்கப்பட்டு வந்ததை 5 சதவீதமாக குறைத்ததனை திரும்பப்பெற்றிடுக!
7) சத்துணவு திட்டத்தில் பணியாற்றி இறந்தோரின் ஆண் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கிடுக!
8) அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணிபளுவை குறைத்திட அலுவலக பணி நேரத்திற்கு பின்பும் அரசு விடுமுறை நாட்களிலும் நடத்தப்பட்டு வரும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதனை தவிர்த்திடுக!
9) முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்களைக் கொண்டு சத்துணவு மையங்கள் மூலம் அமுல்படுத்திடுக!
என உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் முன்வைத்ததை
நிறைவேற்ற தவறியதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்