திருப்பத்தூர்:ஜூன்:23,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்டதாக தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்ட பாஜக தலைவர் வாசுதேவன் தலைமையில் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் போலீசார் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்காத நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால்
100க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து பேருந்து மூலம் அழைத்து சென்று தனியார் திருமண திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட பொது செயலாளர்கள் தண்டாயுதபாணி, கவியரசு , ஜோலார்பேட்டை பாஜக ஒன்றிய துணைத் தலைவர் அருள், உள்ளிட்ட முக்கிய பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஆர்பாட்டத்தினால் பரபரப்பு ஏற்பட்டது.