அரியலூர், ஜூன் 22:
அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான 2}ஆம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை(ஜூன் 24) தொடங்குகிறது.
ஜூன் 24 ஆம் தேதி பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியல், சுற்றுச்சூழல் அறிவியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கும், ஜூன் 25 ஆம் தேதி பி.காம்., வணிகவியல், பி.ஏ.,வரலாறு மற்றும் பொருளியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், ஜூன் 26 ஆம் தேதி பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் நடைபெறும் இந்தக் கலந்தாய்வுக்கு குறித்த நேரத்துக்கு 30 நிமிஷங்களுக்கு முன்னதாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவருடன் மாணவ,மாணவிகள் வருகை தரவேண்டும்.
கலந்தாய்வுக்கு வரும்போது 10 மற்றும் 11, 12 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், சிறறப்பு ஒதுக்கீட்டிற்கான உரிய சான்றிதழ், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள் }2, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ } 4, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் } 2 ஆகியவற்றைற 2 நகல்கள் எடுத்து வரவேண்டும். கல்விக் கட்டணம் முழுவதும் செலுத்திய பின்பே சேர்க்கை முழுமையடையும்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தவறியவர்கள் ஜூன் 24 ,28 வரை கல்லூரியில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்கலாம். அளித்த விண்ணப்பங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 1 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது என அக்கல்லூரியின் முதல்வர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்