பிரசிடியோ மற்றும் ஒய்நியூ இணைந்து சிறுமலை அகஸ்தியர் புறத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனையில் மலைவாழ் இன மக்களுக்கான தனிநபர் அடையாள அட்டை மற்றும் வருவாய் கல்வி சான்றிதழ் பதிவு, பிழை திருத்தம்
குறித்த முகாம் நடத்தப்பட்டது. நிகழ்விற்கு ஒய்நியூ நிறுவனத்தின் செயலாளர் ரம்லாஹமீது முன்னிலை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ந.சுப்ரமணியன் வரவேற்று பேசினார்.திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா முகாமில் மேற்கொள்ளும் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். முகாமில் ஆதார் கார்டு பதிவு செய்தல், பிழை திருத்தம், வருமானச் சான்று, சாதி சான்று, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் புதிதாக பதிவு செய்தல், முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம், இருப்பிடச் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை பதிவு செய்தல் திருத்தம், பான் கார்டு பதிவு செய்தல் போன்ற பணிகள் செய்து தரப்பட்டது. இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அனைவருக்கும் பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டது. நிகழ்விற்கு தேவையான ஏற்பாடுகளை பொன்னுருக்கி ஆசிரியை பஞ்சு, கருப்பு கோயில் ஆசிரியை சோலையம்மாள் மற்றும் தன்னார்வலர்கள் சந்திரா, சுப்பிரமணி தாழக்கடை வெள்ளைச்சாமி, அகஸ்தியர் புறம் அன்னலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.நிகழ்ச்சியின் முடிவில் கள ஒருங்கிணைப்பாளர் ப. கயல்விழி நன்றி கூறினார்.