விளாத்திகுளம், செப். 19:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், தமிழ் மாத பிறப்பு மற்றும் முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது.
விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் குத்துவிளக்கேற்றி, மலர், மஞ்சள், குங்குமம் வைத்து மகாலட்சுமியை வழிபட்டனர். மேலும், 108 மந்திரங்கள் கூறி சிறப்பு பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
மாரி மழை பெய்து விவசாயம் செழிக்கவும், குடும்ப நலம், செல்வம், மன அமைதி மற்றும் ஐஸ்வரியம் பெருகவும் வேண்டி பெண்கள் இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
இதில் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.



