ஆரல்வாய்மொழி, டிச. 6 –
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகில் உள்ள செண்பகராமன்புதூரில் செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு தனது சொந்தச் செலவில் கலையரங்கம் கட்டித்தந்து அதனை
பி.டி.செல்வகுமார் நாளை திறந்து வைக்கிறார். செங்கல் சூளையில் தொழிலாளர்களாகவும், கட்டட தொழிலாளர்களாகவும் வேலை செய்து வரும் செண்பகராமன்புதூர் மக்களுக்காக கலையரங்கம் கட்டி தந்துள்ளார் டாக்டர் பி.டி.செல்வகுமார்.
ஏழை மாணவர்களுக்காகவும், விளிம்பு நிலை மக்களுக்காகவும் தனது சொந்த பணத்தில் கட்டடங்கள் கட்டித் தருவதை முதன்மைப் பணியாக கொண்டவர். அந்த வகையில் ஏழைத் தொழிலாளர்கள் அதிகம் வாழும் செண்பகராமன்புதூர் சிஎஸ்ஐ சர்ச்சுக்கு இந்த கலையரங்கத்தை கட்டித் தந்துள்ளார். புதிய கட்டப்பட்ட கலையரங்க கட்டிடத்தின் திறப்பு விழா 7.12.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிகழ்வுக்கு போதகர் ஜாண் பீட்டர் தலைமை வகிக்கிறார். ஆரல்வாய்மொழி சேகரத்து போதகர் ரசல் ஐசக் முன்னிலை வகிக்க, உதவிப் போதகர்கள் அஜினோ காட்பிரே, ஜெயசிங் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். டாக்டர் பி.டி.செல்வகுமார் கலையரங்கத்தை திறந்து வைக்கிறார். இந்த தினத்தை சபைநாளாகவும் கொண்டாடுவதால் மாணவர்களின் கதகளி, கோலாட்டப் போட்டிகளும் நடைபெறுகிறது.



