நாகர்கோவில், 17.06.2026
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று 17-ம் தேதி நடைபெற்றது. மாவட்ட ஆட்சி தலைவர் பிரதாப் தலைமை வகித்தார்.
நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 346 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து 2 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 6 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைகான ஆணையும், 1 பயனாளிக்கு விதவை உதவித்தொகைக்கான ஆணையும், 1 மாற்றுத்திறன் பயனாளிக்கு விதவை உதவித்தொகைகான ஆணையும் என 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு எளிதில் தீர்வு காணும் நோக்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மாற்றுத்திறன் பயனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வேலுமணி, உதவி ஆட்சியர் பயிற்சி ர.மோனிகா, தனித்துணை ஆட்சியர் சமூகபாதுகாப்பு திட்டம் சரவணன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நிலம் பத்மபிரியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ் சந்திரன், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



