சூரம்பட்டி, ஆக. 6 –
பள்ளிக் கல்வித்துறை – மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த நிகழ்ச்சியில் இசை மற்றும் நாடகம் என இரு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. உறுபாணர் இசைக்குழுவின் சார்பில் ‘யாழ் இசை’ நிகழ்வு நடைபெற்றது. சென்னை கலைக்குழுவின் சார்பில் ‘மன்னுயிர்க் கெல்லாம்’ என்ற மணிமேகலை காப்பியத்தை அடியொற்றிய தமிழ் நாடகம் நடைபெற்றது.
முன்னதாக மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் .ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார். அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.சின்னசாமி தலைம தாங்கினார். ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முத்துசாமி, அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் பேராசிரியர்கள், கல்லூரித் தாளாளர்கள், முதல்வர்கள் மற்றும் பலதுறை சார்ந்த பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



