திருப்பத்தூர், ஆக. 5 –
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சி அண்ணா நகர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பல மாத காலமாக மின் கம்பம் மற்றும் மின் கம்பிகள் மாற்றம் செய்யாமல் இருந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தகவல் அளித்ததின் பேரில் தின தமிழ் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட கொரட்டி மின் பகிர்மான அலுவலர்கள் உடனடியாக மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்களை மாற்றினர். அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் நன்றி தெரிவித்தனர்.



