ஈரோடு, செப். 24 –
ஈரோட்டை அடுத்த பள்ளபாளையம் தங்க மேடு கவி மகாலில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. இதில் 9 வார்டு முதல் 15 வார்டு வரை உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கலந்து கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட மனுக்கள் தொடர்பான சான்றிதழ்களை வழங்கினார்.
பள்ள பாளையம் பேரூராட்சி தலைவர் கோகிலா தங்கமுத்து, செயல் அலுவலர் சுரேஷ் குமார், திமுக ஒன்றிய செயலாளர் பெரிய சாமி, பள்ளபாளையம் பேரூர் திமுக செயலாளர் தங்க முத்து மற்றும் அலுவலர் சிவா உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.



